For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் நரேந்திர மோடி மீது தாக்குதல் அபாயம்: உளவுத்துறை எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

ஆகஸ்ட் 1ம் தேதி கோயம்புத்தூர் வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மீது தாக்குதல் நடத்த சிலஅமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது வருகையின்போது பாதுகாப்பைமிகவும் தீவிரமாக்குமாறு மாவட்ட போலீசாருக்கு உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை மோடியே தலைமை தாங்கிய நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த தேர்தலிலும் வென்றார்.

இவர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி கோயம்புத்தூர் வருகிறார். பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் ரதயாத்திரை அன்றைய தினம் கோவை வருகிறது. இதையொட்டி கோவை வ.உ.சி. பூங்காவில் நடக்கும் கூட்டத்தில்மோடி உரையாற்றுகிறார்.

இந் நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகியுள்ள ஒருவர் நீதிமன்றத்தின் வெளியே தன்னைச் சந்தித்தநபர்களுடன் மோடியின் வருகை குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்று குவித்தமோடியை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என தன்னைச் சந்தித்தவர்களிடம் அவர் பேசியதாக உளவுத்துறையினர் கூறுகின்றனர்.

இதையடுத்து அவருக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X