மிக்-21 போர் விமானத்தில் பறந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
ஹைஅம்பாலா:
இந்திய விமானப் படையில் மிக அதிக அளவில் விபத்துக்குள்ளாகி வரும் மிக்-21 ரக போர் விமானத்தில்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று பறந்தார்.
அடிக்கடி தரையில் விழுந்து நொறுங்கி, விமானிகளின் உயிரைப் பறிதது வரும் இந்த விமானங்கள்பாதுகாப்பானவை அல்ல என்ற கருத்து பரவியுள்ளதால், அதை பொய்யாக்கும் வகையில் இதில் பறந்தார்பெர்னாண்டஸ்.
முன்னதாக சுகோய்-30 ரக அதி நவீன போர் விமானத்தில் பறந்துள்ள பெர்னாண்டஸ், சியாச்சின் பனி மலைக்குப்பல முறை சென்று வீரர்களைச் சந்தித்துள்ளார். சமீபத்தில் ஒரு நாள் இரவு முழுதும் நீர் மூழ்கியில் கடலுக்கடியில்தங்கிவிட்டு வந்தார்.
இந் நிலையில் மிக்-21 ரக விமானத்தில் இன்று காலை பறந்தார். அம்பாலாவில் உள்ள இந்திய விமானப் படைத்தத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு இந்த விமானம் கிளம்பியது. அதை விமானப் படை விமானியான விங்கமாண்டர் ஹரிஷ் இயக்கிச் சென்றார்.
சுமார் 25 நிமிடங்கள் வானில் சுற்றிய இந்த விமானம் குருஷேத்திரம் மற்றும் ஹரியாணாவில் சில நகரங்கள் மீதுசுற்றிவிடடு 10.10 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 100 மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 80விமானிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த விமானங்கள் பறக்கும் சவப்பெட்டிகள் என்றுஅழைக்கப்படுகின்றன.