கஞ்சா கடத்திய கலா கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்த கலா என்ற பெண்ணைபோலீஸார் கைது செய்தனர்.
சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலா. இவரது வீட்டில் கஞ்சா இருப்பதாக போலீஸாருக்குப் புகார்வந்தது. இதையடுத்து கலாவின் வீட்டிற்கு விரைந்த போலீஸார் அங்கு சோதனை போட்டதில் 34 கிராம் ஹெராயின்,30 கிலோ கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றினர். வீட்டின் மாடியில், இவை அனைத்தும் பொட்டலம் போடப்பட்டுவிற்பனைக்குத் தயாராக இருந்தது.
ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து அதில் கலப்படம் செய்து பொட்டலம் போட்டு விற்பனை செய்துவருவதாக போலீஸாரிடம் கலா தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் ஹெராயினின் மதிப்பு ரூ. 2லட்சம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications