ஹெராயின் கடத்திய தம்பதிக்கு 15 ஆண்டு கடுங்காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான கணவன், மனைவிக்கு விதிக்கப்பட்ட 15ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜ்ஒன்றிலிருந்து பால்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள2கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பால்சாமி. இதேபோல, 2000-மாவதுஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பால்சாமியின் மனைவி கிளாடிஸ் லில்லி கோர்ட்டில் சரணடைந்தார்.

இவர் மத்திய கலால்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இருவர் மீதும் மதுரைஅத்தியாவசியப் பொருள் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

அதில் இருவருக்கும் தலா 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடந்த 2000மாவது ஆண்டுசெப்டம்பர் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மனுவைவிசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், இருவருக்கும் விதிக்கப்பட்ட 15 ஆண்டு கடுங்காவல்தண்டனையை உறுதி செய்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கவும்உத்தரவிட்டார்.

தனது தீர்ப்பின்போது, போதைப் பொருள் கடத்துபவர்களைப் பிடிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தஇவர்களே போதைப் பொருள் கடத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இவர்களுக்கு கருணை காட்ட வேண்டியதில்லை. சிறிதளவு கூட அனுதாபம் காட்ட வேண்டியஅவசியம் இல்லை. இவர்களது செயல் அதிர்ச்சி தருகிறது, சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும்வித்தியாசம் இல்லை என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+