போட்டுக் கொடுப்பது" சகஜமாகி விட்டது .. இளங்கோவன்
சென்னை:
என்னையும், காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனையும் மாற்றக் கோரி ஒரு கோஷ்டியினர், டெல்லிக்குச்செல்லும் போதெல்லாம் புகார் கூறுவது என்பது சடங்காகி விட்டது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும்ஒரு சிலர், அடிக்கடி டெல்லிக்குச் செல்வதும், அங்கு சென்று கட்சி மேலிடத்திடம், தலைவரை மாற்றுங்கள், செயல்தலைவரை மாற்றுங்கள் என்று புகார் கூறுவதை சடங்காக வைத்துள்ளார்கள்.
இவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. தலைவர் சோ.பா.வும் கண்டு கொள்ளுவதில்லை.
சத்ய மூர்த்தி பவனில் நடந்த கோஷ்டித் தகராறு சாதாரண விஷயம்தான். இதுகுறித்து மேலிடத்திடமிருந்துவிளக்கம் கோரி யாரும் என்னைக் கேட்கவில்லை. விளக்கம் கொடுக்கக் கூடிய அளவுக்கு இது பெரிய விஷயம்இல்லை.
கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மேலிடத் தலைவர்களுடன் விவாதிக் நானும், சோ.பா.வும் இன்று மாலைடெல்லி செல்கிறோம். கோஷ்டி மோதல் குறித்து விளக்கம் அளிப்பதற்காக நாங்கள் செல்லவில்லை என்றார்.