சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில் போலீஸ் சோதனை
திருப்பத்தூர்:
முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில் ஊழல் தடுப்புப் போலீஸார் நேற்று அதிரடி சோதனைநடத்தினர்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, நேரு, கோ.சி.மணிஉள்ளிட்ட பலர் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாகஅவர்களது வீடுகளில் ஊழல் தடுப்புப் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய விருதுநகர் மாவட்ட திமுக செயலாளரும்,விருதுநகர் எம்.எல்.ஏ.வுமான சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீடு மற்றும் நூற்பாலையில் நேற்றுஊழல் தடுப்புப் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
டி.எஸ்.பி. பிரபாகர் தலைமையிலான போலீஸ் படை இந்த சோதனையில் ஈடுபட்டது. ராமச்சந்திரனின் வீடு,முத்தியால் நகரில் உள்ள அவரது நூற்பாலை ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போதுஏதாவது கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து போலீஸார் எதுவும்தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications