For Daily Alerts
Just In
கல்பனா சாவ்லா பெயரில் விருது .. அரசு அறிவிப்பு
சென்னை:
மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரில் விருது ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், துணிச்சலான, சாகச செயகளில் ஈடுபடும்பெண்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படும்.
ரூ. 5 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது.தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களைஅனுப்ப விரும்பும் பெண்கள், வருகிற 8ம் தேதிக்குள் தங்களைப் பற்றிய விவரங்களை, உயர் கல்வித்துறைச்செயலாளருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பலாம். பேக்ஸ் எண்: 25673499.
அரசினால் நியமிக்கப்படும் குழு விருதுக்குரியவரைத் தேர்வு செய்யும் என்று அரசுச் செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]