அழகிரியின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ஜாமீன்மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தன்னை ஜாமீனில் விடக் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அழகிரி மனு செய்தார். அங்கு அதுநிராகக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் நிராகக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் உயர் நீதிமன்றத்திலேயே இன்னொரு ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி கனகராஜ் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் வாதாடிய அழகிரியின் வழக்கறிஞர்,
வழக்கு விசாரணை முடிந்த பின்னரும் கூட போலீஸார் குற்றப் பத்திக்கை தாக்கல் செய்வதை தாமதப்படுத்திவருகிறார்கள். உள் நோக்கத்துடன், வேண்டும் என்றே இவ்வாறு செய்கிறார்கள். குற்றப் பத்திரிக்கை தாக்கலாகும்வரை அழகிரிக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கூறி வரும் போலீஸ், அதைத் தாக்கல் செய்வதை வேண்டுமென்றேஇழுத்தடித்து வருகிறது.
எனவே அழகிரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
ஆனால், இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவரிடமும்வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. எனவே அழகிரியை ஜாமீனில் விடக் கூடாது என்று அரசு வழக்கறிஞர்வாதாடினார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிந்தது. ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications