வெறி நாய்க்கு கண்ணைப் பறிகொடுத்த சிறுவன்
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வெறி நாய் விரட்டி விரட்டி கடித்துக் குதறியதில் சிறுவன் தனது இடது கண்ணை இழந்தான்.
பரமக்குடி நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் பல வெறி பிடித்து அலைகின்றன.
இந் நிலையில் சலீம் என்ற சிறுவன் வெறி நாய்க்கு தனது கண்ணைப் பரிதாபமாகப் பறிகொடுத்துள்ளான். காதர்கனி என்பவரின் மகனான சலீம், சாலையில் நடந்து சென்றபோது ஒரு வெறி நாய் அவனை விரட்டியது.
பயந்து அவன் ஓட, அவனை விரட்டிச் சென்று கடித்தது அந்த நாய். இதில் சலீம் கீழே விழுந்தான். அப்போதுஅவனது முகத்திலும் அந்த நாய் கடித்தது. அதில் அவனது இடது கண்ணில் நாயின் பல் குத்தியது. இடதுகண்ணையே பல்லால் கடித்து குதறிக் கொண்டு போய்விட்டது அந்த வெறி நாய்.
இதையடுத்து அவன் உயிர் துடிக்க கதறினான். கண் குழியில் இருந்தும், முகம், உடலெங்கும் ரத்தம் வழியஉயிருக்கு மிக ஆபத்தான நிலையில் துடித்த சலீமை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அந்தச் சிறுவன் உயிர் தப்பிவிட்டான். ஆனால்,அவனது இடது கண் போய்விட்டதால் கண்ணிழந்து பரிதாபமாக இருக்கிறான் சலீம். அவனது வீட்டினரும்சோகத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
பரமகுடி நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக எத்தனையோ முறை புகார் கூறியும் நகராட்சிசார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பரமகுடியின் அரசியல் தலைவர்கள் அல்லது நகராட்சியின் மூத்த அதிகாரிகளை வெறி பிடித்த தெரு நாய்கள்விரட்டினால் ஒழிய நடவடிக்கை வராது போலிருக்கிறது.