6,072 அரசு ஊழியர்களுக்கு நிதியுதவி: ஜாக்டோ ஜியோ முடிவு
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்வழக்குகள் முடியும் வரை அவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்க அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்ககூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 6,072 ஊழியர்களைத் தவிர மற்ற அனைவரும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுவிட்டனர். நேற்று 8.063 பேரும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டனர்.
6,072 பேரின் வழக்குகளை விசாரிக்க 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படவுள்ளது. இந்த நீதிபதிகள்குழு ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி, இவர்களது எதிர்காலம் குறித்து முடிவு செய்யவுள்ளது.
அதுவரை 6,072 ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்களின்குடும்பங்களை மனதில் கொண்டு அவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்க ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புமுடிவு செய்துள்ளது.
இதற்காக 12.5 லட்சம் அரசு ஊழியர்களிடம் மாதம்தோறும் ரூ. 10 லட்சம் வசூல் செய்யப்படவுள்ளது.
திருச்சியில் நடந்த அரசுப் பணியாளர் சங்க மாநில கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் உள்ள 12.5லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடமிருந்துமாதந்தோறும் தலா ரூ. 10 வசூல் செய்வது என்றும் இதன் மூலம்வசூலாகும் பணத்தை டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கும் வரை நிதியுதவியாக வழங்குவது என்றும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications