அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 1 மாதத்தில் மீண்டும் வேலை: கூறுகிறார் ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் வேலை கிடைக்கும்என்று என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறினார்.
காஞ்சிபுரத்தில் நேற்று ஜெயேந்திரரின் 69-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, மகாராஷ்டிர மாநில முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர்கலந்துகொண்டனர். பின்னர் ஜெயேந்திரருடன் ஜெயலலிதா சுமார் 45 நிமிடங்கள் தனியாக ஆலோசனைநடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், முதல்வர் ஜெயலலிதாவுடன் அரசியல் எதுவும்பேசவில்லை. இந்துக் கோவில்கள் சம்பந்தமாக இருவரும் பேசினோம். அயோத்தி குறித்து ஏதும் பேசவில்லை.
உலக அமைதிக்காக 12 நாள் யாகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களையும்அழைத்திருந்தோம். இறுதி நாளான இன்று (நேற்று) ஜெயலலிதாவும், சுஷில் குமார் ஷிண்டேவும் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உள்ள கோவில்களை புதுப்பிப்பது குறித்து எனது தலைமையில் கமிட்டி ஒன்றை மாநில அரசுஅமைத்துள்ளது. கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் விளக்கினேன். தலித் கோவில்களுக்கு கூடுதல்மானியம் அளிக்குமாறு முதல்வரைக் கேட்டுக் கொண்டேன். சம்பந்தப்பட்ட தலித் கோவில்களின் பட்டியலைத்தருமாறு முதல்வர் என்னிடம் கேட்டுள்ளார்.
சென்னையில் உள்ள சீரணி அரங்கத்தை இடித்ததில் தப்பில்லை. அரசின் நடவடிக்கை சரியானதுதான்.
டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக கிறிஸ்தவ அமைப்புகளிடமிருந்து பிறந்த நாள் வாழ்த்து வந்துள்ளது.கிறிஸ்தவ மத போதகர்கள் பால் தினகரன், டிஜிஎஸ் தினகரன் ஆகியோர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர் என்றார் சங்கராச்சாரியார்.












Click it and Unblock the Notifications