நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று ஓட்டெடுப்பு
டெல்லி:
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது இன்றுவாக்கெடுப்பு நடக்கிறது.
இந்தத் தீர்மானத்தின்போது நேற்று நடந்த விவாத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், துணைப் பிரதமர்அத்வானிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேசும்போது எதிர்க் கட்சி எம்.பிக்களில் பலர் வெளிநடப்புசெய்தனர். கார்கில் போரின்போது ஆயுதங்கள் வாங்கியதில் இவர் பெரும் ஊழல் செய்ததாகக் கூறியே இந்தநம்பிக்கை இலலாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகிய பரூக் அப்துல்லாவின் தேசியமாநாட்டுக் கட்சி, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
அதிமுகவும் இதே நிலையைத் தான் எடுத்துள்ளது. ஆனால், திமுக, மதிமுக, பா.ம.க. போன்ற கூட்டணிக் கட்சிகள்அரசை ஆதரித்து வாக்களிக்கவுள்ளன.
இன்றும் தொடர்ந்து மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது. அரசை எதிர்த்து எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டிப்பேசி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்று மாலையில் பிரதமர் வாஜ்ாபாய் பதிலளிப்பார்.
இதன் பின்னர் வாக்கெடுப்பு நடக்கும். இதில் அரசு வென்றுவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications