காவலரை தாக்கிய வழக்கு: மதானியின் அப்பீல் மனு மீது 27ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் மதானி மீதுள்ள காவலரைத் தாக்கிய வழக்கில்,அவரது மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானியும் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை மத்தியசிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை சிறைக்கு அவர் கொண்டு வரப்பட்டபோது, ஜேக்கப் என்ற காவலரைத் தாக்கியதாக மதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கோவை 3-வது குற்றவியல் நீதிமன்றம் மதானிக்கு 2 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் மதானி அப்பீல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை முடிந்துவிட்டது. இந்த வழக்கில் வரும் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications