மன்சூர் அலிகான் வீட்டில் ரூ. 3 லட்சம் கொள்ளை: நம்ப மறுக்கிறது போலீஸ்
சென்னை:
சென்னை சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாரிடம் நடிகர்மன்சூர் அலி கான் புகார் தந்துள்ளார். ஆனால், இதை போலீசார் நம்ப மறுக்கின்றனர்.
சூளைமேடு திருக்குமாரபுரம் 4வது தெருவில் உள்ள மாடி வீட்டில் மன்சூர் வசித்து வருகிறார். கீழ் தளங்களைவாடக்ைகு விட்டுள்ளார். படப் பிடிப்புக்காக கடந்த வாரம் ஆந்திரா சென்றார்.
நேற்று சென்னை திரும்பினார். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 3 லட்சம் கொள்ளைபோயிருந்ததாக மன்சூர் அலிகான் போலீசாரிடம் புகார் தந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் மன்சூரின் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது உள்ளே ரத்தக் கறை இருந்தது. அதுஎப்படி வந்தது என்றும் தனக்குத் தெரியவில்லை என மன்சூர் கூறியுள்ளார்.
அதே போல வீட்டின் பூட்டும் உடைக்கப்படவில்லை. பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்து பணத்தைகொள்ளையடித்துவிட்டு, திரும்பவும் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர் என மன்சூர் கூறியுள்ளார்.
இது நம்பும்படியாக இல்லை என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து மன்சூரிடம்இருந்து வாய்வழி புகாரே தந்துள்ளதாலும், எழுத்துப்பூர்வமாக அவர் புகார் கொடுத்தால் முறைப்படி விசாரணைநடத்துவோம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications