பழனி கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் உள்ள தண்டாயுதபாணி கோவில் வளாகம் மற்றும் மலை அடிவாரத்தில்,பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பழனி நகரில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முருகன் கோவில்மலை, அடிவாரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு உள்ளது.
அடிவாரத்தில் உள்ள கடைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கவர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. இதனால்மலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்குகின்றன.
இதையடுத்து நாளை முதல் கோவில், மலைப் பகுதி மற்றும் அடிவாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கோவில்நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி எந்தக் கடையிலாவது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டால்,அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, அடிவாரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகஈடுபட்டுள்ளது.