6,072 அரசு ஊழியர்களிடம் விசாரணை எப்போது?: நீதிபதிகள் விளக்கம்
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணைநடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள 3 ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 6,072 பேர் தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும்வேலை கொடுக்கப்பட்டு விட்டது.
6,072 பேருடைய வழக்கு குறித்து ஓய்வு பெற்ற 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சம்பத், தங்கவேலு, மலை சுப்ரமணியம் ஆகியோர்கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நியமித்தார்.
இந்தக் குழு எப்போது விசாரணை நடத்தும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 3நீதிபதிகளும் கூடி ஆலோசனை நடத்தினர்.
விசாரணை நடத்துவதற்காக குமாரசாமி ராஜா சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் 2 பங்களாக்கள்ஒதுக்கப்பட்டன.
இந்த பங்களாக்களை இன்று 3 நீதிபதிகளும் சுற்றிப் பார்த்தனர். பின்னர் 3 பேரும் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து நீதிபதிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
6,072 பேருடைய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. குமாரசாமி ராஜா சாலையில் உள்ள 2பங்களாக்களில் விசாரணை நடைபெறும். காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை விசாரணை நடக்கும்.விசாரணைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விசாரணைக்கு அழைக்கப்படுவோருக்கு தனித்தனியாக இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர்கள்கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications