For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீநகரில் மாநிலங்களிடை கவுன்சில் கூட்டம்: ஜெ. புறக்கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள மாநிலங்களிடை கவுன்சில்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பொன்னையன் பங்கேற்பார் என்று தெரிகிறது. இக்கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புறக்கணிக்கிறார்.

ஸ்ரீநகரில் நாளை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டம் நடக்கிறது. பிரதமர் வாஜ்பாய்தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, அனைத்து மாநிலமுதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

இக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. பாதுகாப்புகாரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதில் நிதியமைச்சர் பொன்னையன்இக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதுஜெயலலிதாவின் ஆதரவை வாஜ்பாய் கோரவில்லை. இதனாலேயே வாஜ்பாய் தலைமையிலானகூட்டத்தை ஜெயலலிதா புறக்கணிக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X