For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

356-வது பிரிவுவை நீக்கக் கோரும் ஜெயலலிதாவுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் தரும், 356-வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கி விடலாம்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு தமிழக பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் குமாரவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஸ்ரீநகரில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான மன்றக் கூட்டத்தில் முதல்வர்ஜெயலலிதாவின் உரையை நிதியமைச்சர் பொன்னையன் வாசித்தார். அதில், அரசியல் சட்டம் 356-வது பிரிவைநீக்கி விடலாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் கருத்து பா.ஜ.க.வுக்கு ஏற்புடையது அல்ல. நாட்டின் ஒற்றுமை, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கமத்திய அரசு வைத்துள்ள பாதுகாப்புக் கவசம்தான் 356-வது பிரிவு. இந்த சட்டப் பிரிவு இருப்பதால்தான்அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடிகிறது.

இந்த சட்டப் பிரிவின் மீது வெறுப்பு எழக் காரணமே காங்கிரஸ் கட்சிதான். கடந்த காலங்களில் காங்கிரஸ்ஆட்சியில் இருந்தபோது, பலமுறை இந்த சட்டப் பிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டப் பிரிவை எந்த மாநில அரசின் மீதும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பயன்படுத்தி விட முடியாது.கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு இந்த சட்டப் பிரிவை எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்று வழிமுறை வகுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த விதிமுறைகளின் படிதான் இனி 356வது பிரிவை பயன்படுத்த முடியும். எனவே, அந்தப் பிரிவையேஜெயலலிதா நீக்கக் கோருவது சரியல்ல என்று கூறியுள்ளார் குமாரவேலு.

இதற்கிடையே காஷ்மீரில் நடந்த மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில், இந்தப் பிரிவை கடைசி ஆயுதமாகவேபயன்படுத்துவது எனவும், மாநிலங்களை மிரட்டும் வகையில் இதை பயன்படுத்துவதே இல்லை எனவும் மத்தியஅரசுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X