For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வினாயகர் சிலை ஊர்வலம்: சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வினாயகர் சிலை ஊர்வலங்கள் சென்னையில் நடைபெறும்போது மிக பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் எனமாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாளை (31ம் தேதி) வினாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரு வார கால பூஜைக்குப் பிறகுவினாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயக்குமார், மும்பையில் நடந்த வெடிகுண்டுசம்பவங்களையடுத்து சென்னையில் போலீசார் தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக வினாயகர்சிலை ஊர்வலங்களின்போது வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படும்.

வினாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சமூக சேவைஅமைப்புகள், வினாயர் சிலை கமிட்டிகளுடன் அந்தந்தப் பகுதி காவல் நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

பொது மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லாத வகையில் நடத்தப்படும் வினாயகர் சிலை ஊர்வலங்களுக்கு மட்டுமேஅனுமதி வழங்கப்படும். தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி, சென்னை நகரில் 4,000 சிலைகள்வரை நிறுவப்படலாம் என்று தெரிகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X