பசிக் கொடுமை: துப்புறவுத் தொழிலாளி நடுரோட்டில் சுருண்டு விழுந்து சாவு
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் வேலை பார்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட துப்புறவுத் தொழிலாளர்பட்டினியால் நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்தார்.
ஆற்காடு நகராட்சியில் துப்புறவுத் தொழிலாளியாக இருந்து வந்தவர் குமரேசன். அடிக்கடி விடுப்பு போட்டதால்,நகராட்சி நிர்வாகம் இவரையும் மேலும் 5 பேரையும் சஸ்பெண்ட் செய்தது. மருத்துவ சான்றிதழ் வாங்கிக் கொண்டுவந்தால் மட்டுமே மீண்டும் பணியில் சேர்க்க முடியும் என்று நிர்வாகம் கூறி விட்டது.
வேலை இல்லாத காரணத்தால் வறுமையில் வாடியது குமரேசனின் குடும்பம். வீட்டில் உள்ள பொருட்களை விற்றுசமாளித்த குமரேசனிடம் ஒரு பொருளும் இல்லை என்ற நிலை உருவானது. இந் நிலையில் குழந்தைகள் பசியால்துடிக்க, அவர்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருவதற்காக வெளியில் சென்றார்.
கையில் பணமில்லாததால் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் சென்றார். எங்கும் உதவி கிடைக்கவில்லை, கடும்வெயிலில் அங்கும் இங்கும் அலைந்த குமரேசனுக்கும் பசியும் மயக்கமும் ஏற்பட்டது.
நடுரோட்டில் சுருண்டு விழுந்த அவர் அங்கேயே இறந்தார்.
கடந்த 15 நாட்களாக சரியாக சாப்பிடாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்துள்ளார் குமரேசன்.