அடுக்கடுக்காய் அவதூறு வழக்குகள்: கைதாகி, விடுதலையாகி, கைதாகி, மீண்டும் விடுதலையான வெ.கொ!
கடலூர்:
விழுப்புரம் கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டதிமுக பேச்சாளர் வெற்றி கொண்டான், சிறையிலிருந்து வெளியே வந்ததும், மற்றொரு அவதூறுவழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், அதிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால் அவரை வேறுவழியில்லாமல் போலீசார் விடுவித்தனர்.
விழுப்புரத்தில் நடந்த திமுக மாநாட்டில் தலைமைக் கழகப் பேச்சாளரும் முன்னாள் எம்.பியுமான வெற்றிகொண்டான், கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்துப் பேசினார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு அவதூறு ஏற்படும் விதத்தில் பேசியதாக வெற்றிகொண்டான்மீது விழுப்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சனிக்கிழமை இரவில் கைது செய்தனர். கடலூர் சிறையில்அடைத்தனர்.
நேற்று (திங்கள்கிழமை) அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடலூர்சிறையிலிருந்து வெற்றி கொண்டான் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக எம்.பி. ஆதிசங்கர் மற்றும்எம்.எல்.ஏ. புகழேந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் வரவேற்று அழைத்து வந்தனர்.
சிறை வாசலில் இருந்து வெளியே வந்த வெற்றி கொண்டானை சுற்றி வளைத்த கடலூர் போலீசார், அவர் மீதுவந்தவாசி காவல் நிலையத்தில் இன்னொரு அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினர்.
வந்தவாசியில் நடந்த திமுக கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்ய அந்த நகர போலீசார் வந்து கொண்டிருப்பதாகவும், இதனால் காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறினர்.ஆனால், தன்னைக் கைது செய்யக் கூடாது என வெற்றிகொண்டான் வாதிட்டார். திமுகவினருக்கும் போலீசாருக்கும்இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
அப்போது கடும் வெயில் மற்றும் பசி காரணமாக வெற்றிகொண்டட் மயங்கி விழுந்தார்.
இந் நிலையில் அங்கு வந்து சேர்ந்த வந்தவாசி போலீசார், தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிவித்து அவரைகடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினரை போலீசார்விரட்டியடித்தனர்.
பின்னர் வந்தவாசிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஜாமீன் கேட்டு வெற்றிகொண்டானின் வக்கீல் மனு செய்தார். அதை ஏற்ற நீதிபதி வெற்றி கொண்டானைஉடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெற்றி கொண்டான் விடுதலையானார்.
ஜாமீனில் விடுதலையானவரை மீண்டும் இன்னொரு வழக்கில் சிறை வாசலிலேயே வைத்து கைது செய்துள்ளதுஅதிமுக அரசு.
அதே நேரத்தில் நீதிமன்ற உதவியுடன் ஜாமீனில் விடுதலையாகி, அதே நாளில் மீண்டும் கைதாகி, மீண்டும்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் வெற்றி கொண்டான்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications