வந்தாச்சு வட கிழக்கு பருவ மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதற்கான அறிகுறியாக,கன மழை பெய்து வருகிறது.
வட கிழக்குப் பருவ மழை பொதுவாக செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கிவிடும். ஆனால் கடந்த சிலஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில மழை பெய்யவில்லை, மாறாக கடும் வெயில்கொளுத்தியது. வட கிழக்குப் பருவ மழை தாமதமாகும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.
இந் நிலையில் கடந்த இரு நாட்களாக கடலோர தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை,திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இது வடகிழக்குப் பருவ மழை தொடங்கப் போவதற்கான அறிகுறியே என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. இந்த மழை தொடரும்.












Click it and Unblock the Notifications