ஸ்பிக் ஊழல்: தனி நீதிமன்றத்தில் சு.சுவாமி சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்றது தொடர்பான ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர்டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இன்று சாட்சியம் அளித்தார்.

அரசிடம் இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள் மீண்டும் அந்த நிறுவனத்திடமே விற்கப்பட்டன.

ஆனால், அவற்றை அடிமாட்டு விலைக்கு அரசு விற்றதாகவும், இதனால் ஸ்பிக் நிறுவனத்துக்கு பெரும் லாபமும்தமிழக அரசுக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி. முத்தையா செட்டியார் உள்ளிட்டவர்கள் மீதுசுப்பிரமணியம் சுவாமி கடந்த 1998ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 2001ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று சுப்பிரமணியம் சுவாமி தனிநீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ராஜமாணிக்கம்ஒத்திவைத்தார்.

பின்னர் சுவாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்பிக் நிறுவன பங்கு விற்பனை ஊழல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்துள்ள பல்வேறு மனுக்கள் இந்த தனி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை.இதையடுத்து வரும் 27ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+