வட கிழக்குப் பருவ மழை என்னவாயிற்று?
சென்னை:
லேட்டாக தொடங்கினாலும், பயங்கர மழை இருக்கும் என்று கூறப்பட்ட வட கிழக்குப் பருவ மழை காணாமல்போய் விட்டது. தமிழகமெங்கும் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதிலும் தொடங்கியது. ஒரு வார காலம்லேட்டாக தொடங்கினாலும் கூட, தமிழகம் முழுவதிலும் நல்ல மழை இருக்கும் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றபடி மாநிலம் முழுவதிலும் மழை வெளுத்து வாங்கியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வேகமாகஅதிகரிக்கத் தொடங்கியது. மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் நீர் இருப்பு கிடுகிடுவென அதிகரித்தது.
ஆனால் கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதிலும் எங்குமே மழை இல்லை. வெயில் கொளுத்துகிறது. கிட்டத்தட்டகோடை கால வெயில் போல கடுமையாக உள்ளது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் கேட்டபோது,வட கிழக்குப் பருவ மழை முடிவடைய இன்னும் 2 மாத காலம் உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் ஒரிசா நோக்கி நகர்ந்து போன காரணத்தால்தான் வெயில்அடிக்கிறது.
மீண்டும் ஒரு தாழ்வழுத்த மண்டலம் உருவாகும் வாய்ப்புள்ளது. அதன் பிறகு சென்னை உள்பட தமிழகம்முழுவதிலும் கன மழை இருக்கும். மாநிலம் முழுவதிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இன்னும்உள்ளதாக கூறப்பட்டது.
வட கிழக்குப் பருவ மழையை நம்பித்தான் சென்னை மக்கள் குடிநீருக்காக காத்திருக்கிறார்கள். அதேபோல, சம்பாசாகுபடிக்கு வட கிழக்குப் பருவ மழைதான் காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்குக் கை கொடுக்க வேண்டும்.