கெளரவ அட்டை: நாளையுடன் கெடு முடிகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாத வருமானம் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ அட்டைகளாக மாற்றிக்கொள்வதற்கு நாளையுடன் கெடு முடிகிறது.
இதுதொடர்பாக மாநில உணவுத்துறைச் செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மாத வருமானம் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ அட்டைகளாக மாற்றிக்கொள்வதற்கான கெடு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது.
கெளரவ அட்டைகளாக மாற்றிக் காள்ளாதவர்களின் ரேஷன் கார்டுகள் தாமாகவே ரத்தாகி விடும்.அவர்களுக்குப் புது கார்டுகள் வழங்கப்பட மாட்டாது.
மற்ற கார்டுதாரர்கள தங்களது கார்டுகளை அடுத்த ஆண்டு வரை நீட்டித்துக் கொள்ளலாம். இந்தப் பணி அடுத்தமாதம் தொடங்குகிறது. மாத வருவாய் குறித்து தவறான தகவல் தருவோருக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனைவழங்கப்படும்.
அவர் இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications