தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அதிமுக தயராகி வருகிறது: பாஜக
கோழிக்கோடு:
அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தேசியக் கூட்டணிக்கு மீண்டும் திரும்பத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனஎன்று பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புதுறை இணையமைச்சருமான ஓ.ராஜகோபால்கூறினார்.
கிராம அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:
காங்கிரஸ் உள்ளிட்ட முந்தைய அரசுகளின் செயல்பாடுகளோடு ஒப்பிடுகையில், வாஜ்பாய் தலைமையிலானஅரசுதான் நாட்டிற்கு நல்லது செய்வதில் முதன்மையானதாக விளங்குகிறது.
இதைப் புரிந்து கொண்டதால்தான் மம்தகா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இணைந்தது. இப்போது அதிமுகவும் அதற்குத் தன்னை தயார்ப்படுத்தி வருகிறது.
இந்தக் கூட்டணி அரசு நீண்ட நாள் நீடிக்காது என்று கூறியவர்களின் ஆரூடத்தைப் பொய்யாக்கியதோடுமட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல துறைகளிலும் நாட்டை வேகமாக முன்னேற்றிக் கொண்டுவருகிறது.
கடன் சுமையைத் தவிர, 47 வருட காங்கிரஸ் ஆட்சியின் சாதனையாக வேறு எதையும் கூறமுடியாத போது, ஐந்துஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆண்டுள்ள வாஜ்பாய் அரசின் சாதனைகள் மிக அதிகமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது உள்ள நிலைமை என்னவெனில், எந்த ஒரு கட்சியும் கூட்டணியைவிட்டு விலகத் தயாராக இல்லை. மாறாக வெளியேறிச் சென்ற அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் உள்ளே வரத்தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications