வீரப்பன் சுற்றிவளைப்பு: அதிரடிப்படையுடன் துப்பாக்கிச் சண்டை- எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்
பெல்லாரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும், இந்த முறை உயிருடனோ அல்லதுபிணமாகவோ அவன் பிடிபடுவான் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி சென்றிருந்த முதல்வர் கிருஷ்ணா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,சத்தியமங்கலம் அருகே கர்நாடக காட்டுப் பகுதியில் வீரப்பன் இருப்பிடத்தை கர்நாடக அதிரடிப்படையினர்கண்டுப்பிடித்துள்ளனர்.
அங்கு வீரப்பன் கும்பலுக்கும், அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.இருப்பினும் வீரப்பனால் தப்ப முடியாதபடி அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் வீரப்பன் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிபடுவான். விரைவில்அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ள இடத்திற்கு நான் செல்லவுள்ளேன். வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசு மிகநல்ல முறையில் ஒத்துழைப்பு தந்து வருகிறது.
விரைவில் வீரப்பன் பிடிபட்ட செய்தியை உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) தெரிவிக்கிறேன் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications