For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும்: இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

மக்கள் பிரச்சினைகளில் திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டிசம்பர் 1ம் தேதி திமுக நடத்தவுள்ள மறியல் போருக்குகாங்கிரஸ் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளது. மக்கள் பிரச்சனையில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி இதேபோல இணைந்து செயல்படும்.

மணி ஆர்டர் மூலம் விவசாயிகளுக்கு மானியம் அனுப்புவதில் பல்வேறு தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அந்தப்பணம் விவசாயிகளை சென்றடையாது. எனவே அரசே, மானியத் தொகையை நேரடியாக மின்சார வாரியத்திற்குசெலுத்த வேண்டும்.

பூரண மது விலக்கு என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதுதான் எங்களதுகொள்கையும் ஆகும் என்றார்.

ஜெவுக்கு சோ.பா. கண்டனம்

காவிரியில் தண்ணீரே வரக் கூடாது என்றுதான் 3-வது அணி குறித்து ஜெயலலிதா பேசுவதாக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் 3-வது அணி குறித்து ஜெயலலிதா பேசியது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்சோ.பா. கூறுகையில், காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் வரக் கூடாது என்ற நினைப்பில்தான் ஜெயலலிதா இப்படிப்பேசியுள்ளதாக கருதத் தோன்றுகிறது.

பாஜக மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தலைமையிலான ஆட்சிதான் அமையும். இந் நிலையில் மக்களைக் குழப்பவே ஜெயலலிதா மூன்றாவது அணிகுறித்து பேசுகிறார்.

ஜெயலலிதாவின் இந்த ஆசை நிறைவேறினால், காவிரியில் தண்ணீரே வராது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை லஞ்ச, லாவண்யம் இல்லாமல் மேற்கொள்ள அரசு முன் வர வேண்டும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X