அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழை !
சென்னை:
தமிழகம் முழுவதிலும் பரவலாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே குறைந்தக் காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது.இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. பாம்பனில் 8 செமீ மழையும்,திருத்துறைப்பூண்டி, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் 7 செமீ மழையும், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி,தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கணிசமான மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாகவே இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்குவாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications