10, 12ம் வகுப்பு பாடங்களை 9, 11ம் வகுப்புகளில் நடத்தக் கூடாது: அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

100 சதவீத தேர்ச்சியை அடைவதற்காக 10 மற்றும் 12ம் வகுப்புப் பாடங்களை அதற்கு முந்தைய வகுப்புகளில் பலபள்ளிகள் நடத்தி வருகின்றன. இதற்குத் தடை விதித்து தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பில் 10ம் வகுப்பு பாடத்தையும், பிளஸ் 1ல் பிளஸ் 2பாடத்தையும் மெட்ரிக் பள்ளிகள் உள்பட பல பள்ளிகள் நடத்துகின்றன. இதையடுத்து அந்தப் பள்ளிகளே ஒருதேர்வையும் நடத்தி அதில் தேர்ச்சி பெறத் தவறினால் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களை சேர விடாமல்தடுக்கின்றன.

இதைத் தடுக்க புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவில் கூறப்பபட்டுள்ளதாவது:

எஸ்.எஸ்.எல்,ஸி., பிளஸ் 2 பாடங்களை முறையே ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளில் நடத்துவது முற்றிலும் தவறு.இதனால் மாணவர்களின் உடல் , நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த வகுப்புப் பாடங்களைஅந்தந்த வகுப்புகளில் மட்டுமே நடத்தவேண்டும்.

இந்த அரசு உத்தரவை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதோடு, பள்ளி நிர்வாகிகள் மீதும் கடும்நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களை விரைந்து முடித்து விட்டு, அதன் பிறகு எஸ்.எல்.எஸ்.ஸி மற்றும்பிளஸ் 2 பாடங்களைக் கற்பிப்பதும் தவறு. எந்த ஒரு வகுப்பிலும் இறுதியாண்டுத் தேர்வு முடியும் முன் அடுத்தவருடத்திற்கான பாடங்களைக் கற்பிக்கக் கூடாது.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+