கருணாநிதி, நல்லகண்ணுவுக்கு நீதிமன்றம் சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர் போராட்டத்தைத் தூண்டிய வழக்கில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தூண்டி விட்டதாக கூறி கருணாநிதி, நல்லகண்ணு, இளங்கோவன், வரதராஜன்ஆகியோர் மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம், கருணாநிதி வரும் 24ம்தேதியும், நல்லகண்ணு 27ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications