வீரப்பன் விவகாரம்: அதிரடி படைக்கு விரைவில் சாட்டிலைட் போன்கள்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படையினருக்கு விரைவில் செயற்கைக்கோள் போன்கள்வழங்கப்படும்.
தமிழக மற்றும் கர்நாடக காவல் துறையினருக்கு நீண்ட நாள் சவாலாக இருந்து வரும் சந்தனக் கடத்தல்வீரப்பனைப் பிடிக்க நவீன உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. அடுத்த ஒரு மாதத்தில் அதிரடிப்படையினருக்கு நவீன ஆயுதங்களும், செயற்கைக்கோள் போன்களும் வழங்கப்பட்டு விடும்.
தற்போது அதிரடிப் படையினரின் உபயோகத்தில் இருக்கும் வயர்லெஸ் போன்கள் அடர்ந்த காட்டிற்குள்பயனளிப்பதில்லை. காட்டுக்குள் செல்போன்களின் சிக்னல்களும் கிடைப்பதில்லை. எனவே சாட்டிலைட் போன்கள்வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் 7000 சதுர கி.மீ. பரப்பளவில் அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளடக்கிய 18,000 சதுர கி.மீ. பரப்பளவில் வீரப்பன் தன்கும்பலுடன் தைரியமாகத் திரிந்து வருகிறான்.
சாட்டிலைட் போன்களால் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்து வீரப்பனைப் பிடித்து விடலாம் என்று அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். போன்கள் வந்தவுடன் அவற்றை பயன்படுத்துவது குறித்து அவர்களுக்குப்பயிற்சியும் அளிக்கப்படும்.
மேலும் இருட்டுப் பகுதிகளில் வெளிச்சத்திற்காக பயன் படுத்தும் ஸ்பாட் இல்லுமினேட்டர்களும், மரங்களும்,இரும்புத்துண்டுகளும் வழி மறித்துக் கிடந்தால் அவற்றை வெட்ட மெட்டல் கட்டர்களும் வழங்கப்படவுள்ளன.
எப்படியோ இந்த முறையாவது வீரப்பன் வேட்டை வெற்றி பெற்றால் சந்தோஷம்தான்!