தர்மபுரி மாவட்டம் பிரிக்கப்படுகிறது: கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாகிறது!
சென்னை:
தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய தர்மபுரி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரியைத்தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது.
புதிய கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான முடிவு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. மாவட்டப் பிரிவினைக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக தனிஅதிகாரியை நியமிக்கும்படியும் ஜெயலலிதா உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
புதிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஆகியதாலுகாக்கள் இடம் பெற்றிருக்கும். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பெண்ணாகரம், தர்மபுரி, பாலக்கோடு,பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகாக்கள் இருக்கும்.
1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தர்மபுரி மாவட்டம். அன்று முதல் இன்று வரை எந்தவித பொருளாதாரவளர்ச்சியும் இல்லாமல், தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. மிகப் பெரியநிலப்பரப்பைக் கொண்டதாக இருப்பதால் நிர்வாகத்திற்கும் மிகவும் சிரமமானதாக இருந்ததால், இந்தமாவட்டத்தைப் பிரிக்க கடந்த 2001ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா அறிவிப்புவெளியிட்டார்.
ஆனால், மாவட்டத்தைப் பிரிக்க, மத்திய நாடாளுமன்றத் தொகுதி வரையறைக் குழு தடை விதித்து விட்டது.இதனால் உடனடியாக மாவட்டப் பிரிவினை நடைபெற இயலவில்லை. தற்போது குழுவின் சிறப்பு அனுமதியுடன்புதிய மாவட்டம் உருவாகவுள்ளது.