இன்னொரு ஊழியை தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
தமிழக அரசால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட இன்னொரு பெண் ஊழியரும் தற்கொலைக்குமுயன்றுள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் தாமஸ் நிர்மலா நேற்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள்சாப்பிட்டு கவலைக்கிடமான நிலையில் சூர்யா மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
இந் நிலையில் தலைமைச் செயலக ஊழியையான கீதா என்பவரும் விஷம் குடித்து தற்கொலை செய்யமுயன்றுள்ளார். கவலைக்கிடமான நிலையில் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜெவுக்கு பா.ஜ.க. கோரிக்கை:
இந் நிலையில், 587 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்துள்ள முடிவை, தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில்வாபஸ் பெற வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன்கோரியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு ஊழியர் வேலைநிறுத்தப் பிரச்சினையில், சட்டம்,நீதியும் அரசுக்குச் சாதகமாக இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் டிஸ்மிஸ்செய்யப்பட்ட ஊழியர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள அரசு முன் வர வேண்டும்.
பொடா சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தவுள்ள மறியல் போராட்டம் தேவையற்றது. அதை வாபஸ் பெற வேண்டும்என்று மீண்டும் கோருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications