வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை!
சென்னை:
வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்உருவாகியிருப்பதால், மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துவருகிறது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. ஓரிருஇடங்களில் கன மழை பெய்துள்ளது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டனம், கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லைஉள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து லேசான மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்துவருவதால் நகரின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளமாக உள்ளசாலைகள் படு மோசமாக மாறி வாகனங்களைப் பதம் பார்த்து வருகின்றன.












Click it and Unblock the Notifications