மாடி ரயில்: அதிகாரிகள் மீது ஏ.கே.மூர்த்தி பாய்ச்சல்
சென்னை:
சென்னை மயிலாப்பூர்-வேளச்சேரி வரையிலான மாடி ரயில் திட்டப் பணிகள் கடந்த பல மாதங்களாக, எந்தவிதமுன்னேற்றம் இல்லாத நிலையில் இருப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள், காண்டிராக்டர்களை ரயில்வே இணைஅமைச்சர் ஏ.கே.மூர்த்தி கடுமையாகச் சாடினார்.
அமைச்சர் மூர்த்தி, நேற்று திடீரென்று மாடி ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றார். அமைச்சரைஎதிர்பார்க்காத அதிகாரிகள், விரைந்து சென்று திட்டப் பணிகள் குறித்து விளக்கினர்.
கடந்த பல மாதங்களுக்கு முன்பு வந்து பார்த்தபோது இருந்த நிலையே தற்போதும் இருப்பதாக அவர்களிடம்கடிந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி, இதற்கு யார் காரணம் என்று கேட்டார். ஒப்பந்தகாரர்கள் தாமதம் செய்வதாகஅதிகாரிகள் கூறவே, ஒப்பந்தகாரர்களையும் கடுமையாக விளாசினார் அமைச்சர்.
காரணம் இல்லாமல் பணிகளில் தாமதம் செய்யும் ஒப்பந்தகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும்அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர் வேளச்சேரி அருகே அமைக்கப்பட்டு வரும் ரயில் பாதை, மண்ணில் புதைந்து வருவது குறித்தும்அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அமைச்சர். அதுதொடர்பான மண் ஆய்வுப் பணிகளை விரைவில் முடித்துதிட்டத்தை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications