For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். ஜலசந்தியில் பாலம் அமைத்தால் உறவு வலுப்படும்: இலங்கை அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தியில் கடலில் பாலம் கட்டினால், இரு நாடுகளுக்கும்இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று இலங்கை சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் ருக்மன்சேனநாயகே கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின்பல்வேறு பகுதி முகாம்களில் வசித்து வரும் 1.5 லட்சம் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே அழைத்துக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

தாயகத்தில் இழந்த சொத்துக்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை மீண்டும் அகதிகள் பெற இலங்கை அரசு முழுஉதவிகளைச் செய்யும். அவர்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளினால், முஸ்லீம்களுக்கு ஆபத்து உள்ளதாக கூறப்படுவது தவறானதகவல் என்றார் அவர்.

பின்னர் ராமேஸ்வரம் சென்ற அமைச்சர் அங்கு ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர்தனுஷ்கோடிக்கும் சென்று பார்வையிட்டார்.

கடந்த சில நாட்களில் இலங்கையைச் சேர்ந்த கியல்லா, தியாகராஜா பரமேஸ்வரன், சேனநாயகே உள்ளிட்டஅமைச்சர்கள் தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X