பா.ம.கவும் எங்கள் கூட்டணிக்கு வருகிறது: கருணாநிதி
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை எங்களது அணிக்கு அழைத்துள்ளேன். வருவதாக அவரும்உறுதியளித்துள்ளார். எப்போது வருவார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
திமுகவைத் தொடர்ந்து மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்துவிலகியுள்ளது. இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க. சார்பில் சென்னையில் நடத்தப்பட்டபொங்கு தமிழ் பன்னிசைப் பெருவிழா நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் நான் ராமதாஸுடன் தொலைபேசியில்பேசினேன். அப்போது திமுக தலைமையிலான அணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் எப்போது எங்களது அணிக்கு பா.ம.க. வரும் என்பது தெரியாது.
திமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை.ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்னுடன்தொலைபேசியில் பேசினார். நேரில் வருவதாகவும் கூறியுள்ளார்.
கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்போம். ஆனால் ஜாதிக்கட்சிகளுக்கு நிச்சயம் இடம் கிடையாது. கடந்த தேர்தலைப் போல ஜாதிக் கட்சிகளை அரவணைக்க மாட்டோம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீனில் விடுதலையாகி வெளியே வர வேண்டும். அதில் ஒன்றும் தவறுஇல்லை. அவர் மீது பாய்ந்துள்ளது பொய்யான வழக்குதான். ஜாமீனில் வெளியே வந்து, சட்டப்பட்டி பொய்வழக்கை சந்தித்து அதில் வெற்றி காண வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறி விட்டதால், வைகோ விடுதலைக்கு மத்திய அரசுஉதவாது என்று நான் கருதவில்லை. வாஜ்பாய் அந்தளவுக்கு குறுகிய மனம் படைத்தவராக இருக்க மாட்டார் என்றுகருதுகிறேன். மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications