திமுகவின் விருதுநகர் மாநாட்டை குலைக்க ஜெ. சதி: ஸ்டாலின் புகார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

விருதுநகரில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள திமுக பிராந்திய மாநாட்டைக் குலைத்து, இடையூறு செய்ய ஜெயலலிதா அரசு சதிசெய்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகரில் மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை திமுக தென் பிராந்திய மாநாடு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெறுவதால் அந்த சமயத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கையையும்,வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக தலைமை வெளியிடும் என்று தெரிகிறது.

இதையடுத்து விருதுநகர் மாநாடு திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் மாநாட்டுஏற்பாடுகளைப் பார்வையிட மு.க.ஸ்டாலின் விருதுநகர் வந்தார். மாநாடு நடைபெறவுள்ள இடத்தைப் பார்வையிட்ட பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மாநாடு நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. ஆனால் அதை மீறி மாநாடு திட்டமிட்டபடி வெற்றிகரமாகநடக்கும். விருதுநகர் மாநாட்டிற்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ற வகையில் விரிவானஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதிமுகவை விட திமுகதான், பா.ஜ.க.அரசுக்கு பெரும் தொந்தரவுகள் கொடுத்ததாக பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார். அதற்கு மாநாட்டின்போது திமுக தலைவர் கருணாநிதி உரிய பதிலை அளிப்பார் என்றார் ஸ்டாலின்.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு முரசொலி மாறன் நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வழக்கமாக அண்ணா நகர் என்று திமுகமாநாடு நடக்கும் இடங்களுக்கு பெயர் சூட்டப்படும். இம்முறை முரசொலி மாறன் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+