தமிழக விவசாயிகளை வஞ்சித்த வட கிழக்குப் பருவ மழை
சென்னை & தஞ்சாவூர்:
தமிழத்தில் இந்த ஆண்டும் வட கிழக்குப் பருவ மழை பொய்த்துவிட்டது.
தமிழகத்துக்கு நீர் கிடைக்கும் முக்கியமான காலம் வட கிழக்குப் பருவ மழைக் காலமாகும். ஆனால், இந்த மழை 16மாவட்டங்களில் சராசரி அளவிலும், 11 மாவட்டங்களிலும் குறைந்த அளவிலுமே பெய்துள்ளது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூரில் சரசாரிக்கும் குறைவானஅளவுவிலேயே மழை பெய்துளளது. 3 லட்சம் ஹெக்டேரில் சம்பா பயிரிடப்பட்டுள்ளநிலையில், பயிர்கள் பாழ்பிடிக்கும்பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை.
இதனால் மேட்டூர் அணை நீரை நம்பியிருந்த விவசாயிளுக்கு கடந்த வாரம் இடியான செய்தி வந்து சேர்ந்தது. அந்த அணையில்நீர் மட்டம் வெறும் 30 அடியாகக் குறைந்ததால் அணை மூடப்பட்டது. இதையடுத்து பவானியில் இருந்து தண்ணீர் விடுவதாகஅரசு அறிவித்தாலும் அதை வைத்து சம்பா பயிரை கரையேற்ற முடியாதே என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது.
இந்தப் பொங்கலுக்காவது சம்பா விளைந்து வாழ்வு தந்துவிடும் என்று நம்பி தமிழக டெல்டா விவசாயிகளை கர்நாடகத்துடன்சேர்ந்து வட கிழக்குப் பருவ மழையும் வஞ்சித்துவிட்டது.