இடங்கள் பகிர்வு: கூட்டணி கட்சிகளுடன் பேச திமுகவில் 6 பேர் குழு
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து, அக்கட்சித் தலைவர்களுடன் பேச 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான இக் குழுவில் கருணாநிதியோ, அன்பழகனோ இடம்பெறவில்லை.
துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்களும் கட்சியின் மூத்த தலைவர்களுமான கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம்ஆகியோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இத் தகவல் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளளது.
இந் நிலையில் வரும் 19ம் தேதி மாலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் உயர் மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டமும், அடுத்த நாள் காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அன்பழகன்அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக்
திமுக கூட்டணியில் சேர அகில இந்திய பார்வர்ட் பிளாக் வல்லரசு பிரிவு முடிவு செய்துள்ளது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் வல்லரசு பிரிவின் செயற்குழுக் கூட்டம் மதுரை மாவட்டம்உசிலம்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் கட்சித் தலைவரும், வல்லரசுவின் மகனுமான கதிரவன்செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
விரைவில் கருணாநிதியை சந்தித்து எங்களது ஆதரவைத் தெரிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications