For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக மாநாடு தேதி மீண்டும் மாற்றம்: முன் கூட்டியே நடத்துகிறார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விருதுநகரில் நடைபெறவுள்ள திமுக தென் மண்டல மாநாட்டுக்கான தேதிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநாடுமுன் கூட்டியே நடத்தப்படவுள்ளது.

முன்னதாக மாநாடு மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடப்பதாக இருந்தது. இதை முன் கூட்டியே பிப்ரவரி 28 மற்றும் 29ஆகிய தேதிகளில் நடத்த திமுக முடிவெடுத்தது.

இந் நிலையில் மீண்டும் தேதியை மாற்றி, வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலேயே மாநாட்டை நடத்திவிட திமுக தலைவர்கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதாகக் கூறப்படுவதால், பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக வரவேற்புக்குழுத் தலைவர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிக்கையொன்றில்தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பில், இந்த பிரமாண்டமான மாநாட்டுக்கான பணிகள் விருதுநகரில் நடந்து வருகின்றன. இதில் சுமார்6 திமுகவினர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X