மக்களவை தேர்தல் சவாலானது: புதிய தலைமை தேர்தல் ஆணையர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பது சவாலான விஷயம் என்று புதியதலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நேற்று கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில்உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் குவிந்தனர்.

செய்தியாளர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி பின்னர் பேசுகையில், நாடாளுமன்றம்கலைக்கப்பட்ட உடனேயே தேர்தல் தேதிகளை அறிவிப்போம். இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தல் மார்ச்சில் நடக்கப் போகிறது, ஏப்ரலில் நடக்கப் போகிறது என்று பத்திரிக்கைகளும்,அரசியல் கட்சிகளும்தான் கூறி வருகின்றன. அரசுதான் நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து முடிவெடுக்கவேண்டும். அதன் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும்.

தேர்தலுக்கான அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து உரிய துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி அதன் பின்னரே தேதியை அறிவிக்க முடியும். இருப்பினும் இவற்றை விரைவாக முடித்து விட்டு தேதியைஅறிவிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பது மிகவும் சவாலானது. அதைச் சந்திக்கதேர்தல் ஆணையம் தயாராகவே உள்ளது என்றார் கிருஷ்ணமூர்த்தி.

63 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி, ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார். இவர் திருநெல்வேலி அருகே உள்ள தருவை என்றகிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2000மாவது ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்தோனேசிய அரசால், அந் நாட்டு தேர்தல் நடைமுறைகளை சீரமைப்பது குறித்து நியமிக்கப்பட்ட சர்வதேசகுழுவில் கிருஷ்ணமூர்த்தியும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு வரைகிருஷ்ணமூர்த்தி தலைமை தேர்தல் ஆணையராக இருப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+