சென்னை, மதுரையில் திடீர் மழை; மகிழ்ச்சியில் மக்கள்!
சென்னை:
சென்னை மற்றும் மதுரையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
மார்கழி மாதம் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் பனி நின்று, வெயில் ஆரம்பித்து விட்டது. குறிப்பாகசென்னை, மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.
இந் நிலையில், சென்னை மற்றும் மதுரையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. மதுரையில் சுமார் ஒருமணி நேரம் மட்டுமே பெய்தது. ஆனால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்குநல்ல மழை பெய்தது.
குடிக்கக் கூட தண்ணீரின்றி வாடிக் கொண்டுள்ள சென்னை மக்களுக்கு இந்த திடீர் கன மழை பெரும் மகிழ்ச்சியைக்கொடுத்தது. இந்த கன மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பில் பெரிய அளவு மாற்றம்ஏற்படாது என்றும், வெப்பத்தைக் குறைக்கவே இது உதவும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
இந்த திடீர் மழைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் புயல் சின்னம் எதுவும் வங்கக் கடலில்தோன்றவில்லை என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
மதுரை தவிர ஒரு சில தென் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.