For Daily Alerts
Just In
வீரப்பனுக்கு உதவினால் 10 வருடம் ஜெயில்!
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எந்த வகையான உதவிகள் செய்தாலும் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்படும் என்று அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு அதிரடிப்படை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், வீரப்பன் வேட்டையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. வீரப்பனுக்கு உதவுவோரின்எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கிராம மக்கள், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என யாரும் வீரப்பனுக்கு உதவக் கூடாது. அப்படிச் செய்தால், 7ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.
கர்நாடக அதிரடிப்படையுடன் தற்போது நல்ல உறவு உள்ளது. வீரப்பன் தமிழக காட்டு எல்லைக்குள் தற்போதுஇல்லை என்றார் விஜயக்குமார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, January 27, 2004, 5:30 [IST]