For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமங்கலத்தில் ஈவ்டீசிங்: திருமணமான பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி என்ற இடத்தில் வீட்டில் தனியாக இருந்தபெண்ணை பலாத்காரம் செய்ய 3 பேர் முயன்றதால், அவமானமடைந்த அப்பெண் தீக்குளித்தார். காப்பாற்றப்போன கணவரும் படுகாயமடைந்தார்.

டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி. பூ வியாபாரியான பூபதியின் மனைவி ராஜாக்கனி வீட்டில் தனியாகஇருந்துள்ளார். அப்போது 3 பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்து, ராஜாக்கனியை கேலி செய்துள்ளனர். பின்னர்அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளனர்.

இதனால் அவமானமடைந்த ராஜாக்கனி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீயில் கருகிய ராஜாக்கனியை காப்பாற்ற பூபதி முயன்றுள்ளார். அதில் அவரும் படுகாயமடைந்தார்.

இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜாக்கனியின் நிலைகவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் டி.கல்லுப்பட்டியில் பெரும் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X