For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடுசெய்துள்ளது.

ஆனால், இந்த மனுவில் சில தவறுகள் இருந்ததால் அதைச் சுட்டிக் காட்டிய நீதிமன்றம் மனுவை ஏற்கவில்லை. இதையடுத்துமீண்டும் புதிய மனு தயார் செய்து இன்றே அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் கியூ பிராஞ்ச் போலீசார்.

அதில், ஜூன் மாதத்துக்குள் பொடா வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குவைகோவின் ஒத்துழைப்பு மிக அவசியம். அவர் ஒத்துழைத்தான் தான் விரைவில் வழக்கை முடிக்க முடியும். இதனால் அவருக்குபொடா நீதிமன்றம் தந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது வரும் திங்கள்கிழமை விசாரணை நடக்கும் என நீதிபதிகள் சிர்புர்கள், இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர்அறிவித்தனர். வைகோவுக்கு பொடா நீதிமன்றம் விதித்த மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தியது இந்த நீதிபதிகள்என்பது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X