விருதுநகர் திமுக மாநாட்டுக்கு ரூ. 1.20 கோடி செலவு!
விருதுநகர்:
விருதுநகரில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தென் மண்டல மாநாட்டிற்காக ரூ. 1.20கோடி செலவிடப்படவுள்ளதாக மாநாட்டு அமைப்பாளரும், மாவட்டச் செயலாளருமானகே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்75 ஏக்கர் பரப்பளவுக்கு பந்தல் அமைக்கப்பட உள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு மிகக் குறைந்தவிலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.
கருணாநிதியின் அறிவுரைப்படி மாநாடு தொடர்பான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாநாட்டு செலவுக்காக ரூ. 1.20 கோடி சேகரிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 21ம் தேதி காலை ரயில் மூலம் விருதுநகர் வருகிறார் கருணாநிதி. அவருக்கு ரயில் நிலையத்தில்பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படும். காலை 9 மணிக்கு கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார் கருணாநிதி என்றார் ராமச்சந்திரன்.
இந்த மாநாட்டிற்கு சுமார் 8 லட்சம் திமுக தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில்மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது:
இதற்கிடையே தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளவர்களிடம் நேர்காணலைத்தொடங்கியுள்ளார் கருணாநிதி.
கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன்உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்துகின்றனர். தயாநிதி மாறன் தவிர்க்கப்படுகிறார்.
தொகுதியில் வேட்பாளரின் செல்வாக்கு, தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்ய முடியும், பலம், பலவீனம் எனபல விஷயங்கள் குறித்து விண்ணப்பதாரர்களிடம் கேட்கப்படுகிறது.
நேற்று திருச்செந்தூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது. திருச்செந்தூரில்போட்டியிட எண்கெளன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகாவும்விண்ணப்பித்துள்ளார். அவரிடமும் நேர்காணல் நடந்தது.
இன்று திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, திருப்பதூர் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications