நக்கீரன் கோபால் மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொடா சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருப்பது குற்றமாகும்என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக நக்கீரன் கோபால் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக கோபாலை பொடா சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்தது.253 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் கடந்த டிசம்பர் 20ம் தேதி கோபால் ஜாமீனில் வெளிவந்தார்.

இந் நிலையில், தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருப்பது பொடா சட்டபடி குற்றமாகும் என்றுதமிழக அரசு 2002, டிசம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோபால் மனுத் தாக்கல்செய்தார்.

தனது மனுவில், ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதையும் இச் சட்டப் பிரிவின் கீழ் கொண்டு வருவது கொண்டுவந்தது பொடா சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு எதிராகும். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில்,ஆயுதம் வைத்திருப்பதை குற்றம் என அறிவித்தபிறகு அதை அவ்வப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும்என்று கூறியிருந்தது. ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை.

மேலும் தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டமோ, தீவிரவாத செயல்களோ இல்லாத நிலையில் பொடா சட்டத்தின்4வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரு தடையுத்தரவைப் பிறப்பித்தது தவறு. எனவே, அரசுவெளியிட்ட உத்தரவை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று நீதிபதி ராஜேந்திரபாபு மற்றும் நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.அப்போது கோபாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா ஆஜராகி வாதாடினார்.

இது தொடர்பாக தனது பதிலை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+