தாறுமாறாக ஓடிய லாரி மோதி 3 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி சாலையோரம் பழ வியாபாரம் செய்து வந்த 3 பெண்கள்பரிதாபமாக இறந்தனர்.
லால்குடி அருகே உள்ளது தூவலூர் கிராமம். இந்தக் கிராமத்தின் வழியே செல்லும் நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது.
இந்த சாலையில் இன்று காலை படு வேகத்தில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பஸ் நிறுத்தத்துக்குள்புகுந்து அங்கு நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் பஸ் நிறுத்தம் அருகே பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கிஉயிரிழந்தனர். ஒரு சிறுவன் படுகாயமடைந்தான்.












Click it and Unblock the Notifications